ரோரரண்டோவில் “எழுவான்” தமிழ்த்தேசிய வணிக நிறுவனக் கூடல்
2054 விடை 15ஆம் நாள் காரிக்கிழமை(27.5.2023 Saturday) கனடா மார்க்கம் நகராட்சியில் அமைந்துள்ள கோட்யாட் மைத்ரிட்(Courtyard Marriott) உயர்நிலை விடுதியில் சிறப்பாக நடைபெற்றது. பல தமிழர்களின் தமிழ்த்தேசிய கனவை இக்கூடல் ஒழுங்கமைப்பாளர்களின் செயற்திட்டத்தில் காணக்கூடியதாக இருந்தது.இக்கூட்டத்தில் தமிழீழ மக்களின் நலன்சார்ந்தவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.அவர்களில் பல இளையவர்கள் எழுவானோடு இணைந்து கொள்வதில் துடிப்பாக இருந்தார்கள். தமிழ்த்தேசிய வணிக நிறுவன கூடலில் அதிகப்படியான பெண்கள் இணைந்து கொண்ட இந்த நிகழ்வு அதிஉயர் சிறப்பாகும். தமிழ்த்தேசியம் என்பது தமிழரின் உயிர் உடைமை…
